ஓய்வூதியர்களின் வருடாந்த வதிவிடம் மற்றும் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் செயற்பாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந் நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் முற்பகல் (20 ஆந் திகதி) பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கெளரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையின் கீழ் ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதுவரை கிட்டத்தட்ட 641,000 பேர் ஓய்வூதியத் திட்டத்திற்கு உரிமை கோருகின்றார்கள் என்பதோடு அரசு மாதாந்தம் 250 பில்லியன் ரூபாயை ஓய்வூதியம் செலுத்துவதற்காக ஒதுக்கியுள்ளது. எவ்வாறாயினும் ஒருசில இடங்களில் மரணித்த ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை மோசடியாக பெற்றுக்கொள்ளப்படுவதாக அறியக்கிடைத்துள்ளது என்பதோடு அது போன்ற பல விடயங்கள் காரணமாக வருடமொன்றிற்கு மில்லியன் ரூபா அளவு நிதி அரசு இழக்கின்றது எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந் நிலைமைகளை தடுக்கும் வகையில் ஓய்வூதியத் திணைக்களம் இதுவரை வருடாந்த ஓய்வூதியர்களின் வதிவிடம் மற்றும் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் செயல்முறையொன்று பேணப்பட்டு வந்துள்ளதோடு இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் செயல்முறையுடன் இதனை மிகவும் முறைசார்ந்த வகையிலும் நிவர்த்தியாகவும் மேற்கொள்வதற்குரிய இயலுமை காணப்படுகின்றது. 2016 சனவரி மாதம் 1 ஆந் திகதியின் பின்னர் ஓய்வூதியம் பெற்ற சகலருக்கும் இப் புதிய முறைமையின் கீழ் முதலில் பதிவு செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஏனையவர்ளையும் குறுகிய காலத்தினுள் பதிவு செய்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப கட்டமாக ஏறத்தாழ 80000 பேரின் விபரங்கள் பதிவு செய்யப்படவுள்ளது. இந் நடவடிக்கையை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்வதற்கு திணைக்களம் நாடுகின்றது. ஒட்டுமொத்த ஓய்வூதியர்களுக்கும் இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் பின்னர் தற்போது வருடாந்தம் நடைபெறும் பதிவு செய்தல் நடைமுறையை 03 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்வதற்கும் திணைக்களம் திட்டமிட்டடுள்ளது. அதனால் ஏற்பட முடியுமான மோசடிகள் மற்றும் ஊழல்களை முழுமையாக தடுப்பதற்கு முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப கட்டமாக இப் பதிவினை மேற்கொள்ளும் நடவடிக்கை வரையறுக்கப்பட்ட ஒரு சில பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதால் அமைச்சரினால் அப் பிரதேச செயலாளர்களுக்கு கணனிகள் வழங்கிவைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இச் சந்தர்ப்பத்திற்கு அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் கௌரவ இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அவர்கள், அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டிஆரச்சி அவர்கள், ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் திரு. ஜகத் டயஸ் அவர்கள் உள்ளிட்டோரும் அந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.