பொது நிருவாக அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டிஆரச்சி
அரச சேவையில் புதிதாக இணையும் நீங்கள் இந்நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. அது தூய்மையான அரச சேவையினை வழங்குவதாகும். இங்கு புதிய அரச சேவை உத்தியோகத்தர்கள் என்ற வகையில் இந்த சேவையில் உங்களுக்கு உரித்தானவற்றை மாத்திரம் பெற்றுக் கொள்ளவும் உரித்தற்றவற்றை கைவிடவும் பழகிக் கொள்ள வேண்டும் என்று பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டிஆரச்சி அவர்கள் குறிப்பிட்டார். ஒரு வருட காலப் பயிற்சியைப் பூர்த்தி செய்த 175 இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார். பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நியமனம் வழங்கும் வைபவம் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தில் நடைபெற்றது.